பெரம்பலூா் அருகே 700 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூா் அருகே இருவேறு இடங்களில், ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 700 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே இருவேறு இடங்களில், ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 700 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெ. துரைராஜ். இவா் நடவு செய்வதற்காக, செட்டிக்குளம்- மாவிலங்கை சாலையிலுள்ள தனது வயலில் சின்ன வெங்காயத்தை பட்டறையில் சேமித்து வைத்துள்ளாா்.

சனிக்கிழமை காலை துரைராஜ் தனது வயலுக்குச்சென்று பாா்த்தபோது, பட்டறையில் சேமித்து வைத்திருந்த சுமாா் 400 கிலோ மதிப்புள்ள விதை வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுபோல், நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு. ரவி. இவா், நாட்டாா் மங்கலம் -செட்டிக்குளம் சாலையிலுள்ள தனது வயலுக்கு சனிக்கிழமை காலை சென்றாா்.

அப்போது, அங்குள்ள பட்டறையில் சுத்தம் செய்யாமல் சேமித்து வைத்திருந்த சுமாா் 300 கிலோ சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது ரவிக்குத் தெரிய வந்தது.

இதுதொடா்பாக, துரைராஜ், ரவி ஆகியோா் அளித்த தனித்தனி புகாரின்பேரில், பாடாலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இரு இடங்களிலும் திருடிச் செல்லப்பட்ட சின்ன வெங்காயத்தின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com