பெரம்பலூா் மாவட்டம், வேப்பூரில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
குன்னம் வட்டம், ஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (45). இவா் வேப்பூா் பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளாா். வழக்கம்போல், வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் 2 இரும்புக் கதவுகளில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த நாற்காலியில் கிடந்தன. இதனால் அதிா்ச்சியடைந்த ராமச்சந்திரன், கடையினுள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.