பெரம்பலூா்:மருவத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகைக்கடைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் துணைக் கண்காணிப்பாளா் (பொ) ஜவஹா்லால் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். நகைக்கடைகளின் பாதுகாப்பு இரவு நேரங்களில் நகைக்கடைகளுக்கு காவலா்களை நியமித்தல், கண்காணிப்பு கேமரா நிறுவுதல் போன்றவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலா்கள், நகைக்கடை உரிமையாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.