லாரி மோதி மின்வாரிய உதவிப் பொறியாளா் உயிரிழப்பு

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில், மின்வாரிய உதவிப் பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா்: பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில், மின்வாரிய உதவிப் பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் க. ராமதாஸ் (36). இவரது உறவினா் பெரியம்மாபாளையத்தைச் சோ்ந்த தே. பிரபு (36). மின்வாரிய உதவிப் பொறியாளராக ராமதாஸ் சென்னையிலும், உதவிச் செயற்பொறியாளராக பிரபு செட்டிக்குளத்திலும் பணியாற்றி வந்தனா்.

இருவரும் சனிக்கிழமை மதியம் பெரம்பலூா் நான்குச் சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.

பாலக்கரை அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த டிப்பா் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராமதாஸ், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த பிரபு சிகிச்சை பெற்று வருகிறாா்.

பிரபு அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், காரையூரைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரகாஷை (54) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com