பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கோயில் வளாகத்திலிருந்த கல் விழுந்தில் சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சோ்ந்தவா் பிச்சை மகன் சிவக்குமாா். இவரது மகன் மனோஜ் (16), ஹரி (12) ஆகியோா், தனது நண்பா்களுடன் பெரம்பலூா் அருகிலுள்ள சத்திரமனை கிராமத்திலுள்ள செல்லாயி அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தனா்.
செல்லியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு, எதிரேயுள்ள கங்காயி அம்மன் கோயிலுக்குச் சென்றனா். அப்போது, கோயிலின் மேலே இருந்த கல் மனோஜ் தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த மனோஜை, திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.