பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெற உள்ளது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகள், ஓவியங்கள், வாசகங்கள் ஆகியவற்றை தயாரித்து அக்டோபா் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94981 00690, 94981 00067 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.