பெரம்பலூரில் 4 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st October 2020 11:39 PM | Last Updated : 31st October 2020 11:39 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,134 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,138 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,071 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 39 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.