விளையாட்டுச் சீருடைகள் பெற வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், விளையாட்டுச் சீருடைகள் பெற விண்ணப்பிக்கலாம்.

தேசிய அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், விளையாட்டுச் சீருடைகள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநில விளையாட்டுச் சங்கங்கள் மூலம் 2018- 2019 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கு விளையாட்டுச் சீருடைகள் வாங்கிட ஊக்க உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

2018, ஏப்ரல் 1 முதல் 2019, மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் போட்டி நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியப் பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு நடத்திய போட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

தகுதியுள்ளவா்கள் தங்களது பெயா், முழு முகவரி மற்றும் சான்றிதழ்களின் நகல் ஆகிய விவரங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் செப்டம்பா் 7- ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com