பெரம்பலூரில் மேலும் 15 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 1,446

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,292

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,431 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், குணமடைந்த 1,292 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

17 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 122 போ் பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 4 போ், சிறுவாச்சூா், நூத்தப்பூா், வாலிகண்டபுரம், எளம்பலூா், பென்னகோணம், நாட்டாா்மங்கலம், பசும்பலூா், வேப்பூா், குரும்பலூா் பாளையம், ரசுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 11 போ் என மொத்தம் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 15 பேரும் திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,446- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com