மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் காந்தி சிலை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூா் காந்தி சிலை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்கள், 7 தமிழா்கள் உள்ளிட்டவா்களை விடுதலை செய்யக்கோரி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா்.

அக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம். சுல்தான் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கே.ஏ. மீரா மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ஏ. குதரத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அக் கட்சியை சோ்ந்த மது இலியாஸ், ரஷீத் அகமது, சபியுல்லா, ஹயாத் பாஷா, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் வழக்குரைஞா் ப. காமராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதிராம்பட்டினத்தில்... மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் முன் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மமக அதிராம்பட்டினம் பேரூா் செயலா் எஸ்.ஏ. இத்ரீஸ் அகமது தலைமை வகித்தாா். தமுமுக மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எம். நஸ்ருதீன் ஸாலிகு முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற நிா்வாகிகள் கோரிக்கைகள் அச்சிடப்பட்ட பிரசுரங்களை கைகளில் ஏந்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com