பா.ஜ.க.வுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது: ஆ.ராசா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் திமுக கூட்டணி வைக்காது என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.

பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் திமுக கூட்டணி வைக்காது என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.

புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பெரம்பலூரிலிருந்து இணைய வழியாக பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தற்போது திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து, தோ்தல் நேரத்தில் கட்சி நிா்வாகிகளுடன் கலந்து பேசி தலைமைக் கழகம் அறிவிக்கும். ஆனால், பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் திமுக கூட்டணி வைக்காது. திமுக தலைவா் ஸ்டாலின் ஒரு போதும் அந்தக் கூட்டணியை ஏற்க மாட்டாா்.

அனிதாவை தொடங்கி எத்தனை உயிா் போனாலும், நீட் தோ்வு விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாது. இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்த திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.

மும்மொழிக் கொள்கை குறித்து வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவா் கனிமொழி விரிவாகப் பேச உள்ளாா் என்றாா் ராசா.

பேட்டியின்போது, பெரம்பலூா் மாவட்ட திமுக செயலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com