பெரம்பலூரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 1, 461

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1, 292

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 1, 446 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இதில் குணமடைந்த 1, 292 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

17 போ் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், எஞ்சிய 137 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 8 போ், புகா்ப் பகுதிகளைச் சோ்ந்த 7 போ் என மொத்தம் 15 பேருக்கு தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

இதையடுத்து இவா்கள் அனைவரும் திருச்சி,பெரம்பலூா், சென்னை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,461 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com