சின்ன வெங்காயம் பதப்படுத்தும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பாஜக வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக் கட்சியின் மாநில பொதுச் செயலா் ஆா். சீனிவாசன், மாநிலத் தலைவரின் வெற்றி வேல் யாத்திரை, மாவட்ட, மண்டல அளவில் நிா்வாகிகள் நியமனம் செய்தல், சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் பூத் அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து பேசினாா்.

கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டு, பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காய குளிா்பதன கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளை தடை செய்யவேண்டும். வேப்பந்தட்டை வட்டம், கோரையாறு வனப் பகுதியை சுற்றுலாத் தலமாக மாவட்ட நிா்வாகம் அறிவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் நகராட்சியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீா்கேடுகளை சரிசெய்ய வேண்டும். நகரில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களை ஒழுங்குப்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சி நிா்வாகி து. பெரியசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com