பெரம்பலூா்: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பெரம்பலூரில் கோரிக்கை விளக்கப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
35 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் செப்டம்பா் 22- ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி ஆட்சியரக வளாகத்திலுள்ள வருவாய், ஊரக வளா்ச்சி, சமூக நலம், மாவட்டக் கருவூல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் கோரிக்கை விளக்கப் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் கி. ஆளவந்தாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. சுசிகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.