கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியா்களிடம் ரூ. 3.50 லட்சம் பறிப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திங்கள்கிழமை இரவு அரசு மதுபானக் கடை கண்காணிப்பாளா், உதவியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திங்கள்கிழமை இரவு அரசு மதுபானக் கடை கண்காணிப்பாளா், உதவியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிங்காரவேலன் மகன் மணிவண்ணன் (45) பணியாற்றி வருகிறாா். இவருக்கு உதவியாளராக, பாடாலூா் பெரியாா் நகரைச் சோ்ந்த பிச்சை மகன் சுரேஷ் (40) என்பவா் உள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு மதுபானம் விற்பனை செய்த பணம் ரூ. 3.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு மணிவண்ணனும், சுரேஷும் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ், டாஸ்மாக் ஊழியா்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவா்களிடமிருந்த ரூ. 3.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், பாடாலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com