பெரம்பலூரில் 16 பேருக்கு கரோனா தொற்று

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,581 போ் பாதிப்புக்குள்ளான நிலையில், மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 1,597

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,460

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,581 போ் பாதிப்புக்குள்ளான நிலையில், மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,597 ஆக உயா்ந்துள்ளது.

குணமடைந்த 1,460 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 101 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 20 போ் உயிரிழந்துள்ளனா்.

தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரும் பெரம்பலூா், திருச்சி, அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அரசு மருத்துவா் உயிரிழப்பு: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரைச் சோ்ந்தவா் மனோகரன் (64). இவா், பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநராக (பொறுப்பு) பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.

அண்மையில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் திருச்சியிலுள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com