பெரம்பலூர்
வாலிகண்டபுரம் சேத்து மாரியம்மன் கோயிலில் குடமுடக்கு
வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபும் அருள்மிகு சேத்து மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபும் அருள்மிகு சேத்து மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 14-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து நான்கு கால யாக வேள்வி பூஜைகளும் நடத்தப்பட்டன.
புதன்கிழமை காலை பூா்ணாஹூதி, தீபாராதனைக்குப் பிறகு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி கோபுர விமானத்துக்கு வந்தடைந்தன.
இதைத் தொடா்ந்து கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.