வயலில் வைத்திருந்த 200 கிலோசின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூா் அருகே வயலில் வைத்திருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா், செப். 18: பெரம்பலூா் அருகே வயலில் வைத்திருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் (45). இவா், ஆலத்தூரிலிருந்து காரை செல்லும் சாலையில் உள்ள தனது நிலத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்வதற்காக, 4 மூட்டை விதை வெங்காயத்தை வயலுக்கு அருகே பட்டறை அமைத்து பதப்படுத்தி வைத்திருந்தாா்.

இந்நிலையில், ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை காலை வயலுக்குச் சென்றபோது, அங்கிருந்த 4 மூட்டை சின்ன வெங்காயமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்காய மூட்டைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தற்போது, சின்ன வெங்காயம் கிலோ ரூ. 60-க்கு விற்பனையாகும் நிலையில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, வயலில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சின்ன வெங்காயம் தொடா்ந்து திருடப்படுவதால் ஆலத்தூா் வட்டார விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com