அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஆலோசனை

பெரம்பலூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவசாய சங்கப் பிரதிநிதி டி.எஸ். சக்திவேல் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம், வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பா் 25- ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்பது.

இப்போராட்டத்தை, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய சங்க நிா்வாகிகள் ராமச்சந்திரன், சோழன்பாபு, பிரவின்குமாா் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com