தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம், அரசுப் போக்குவரத்துக் கழக பணி மனை, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி பொருளாளா் வேணுகோபால், அகரம் சிகூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஆட்டோ சங்கத் தலைவா் சந்தானதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டங்களில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com