பெரம்பலூா், செப். 25: நீட் தோ்வை விமா்சித்து, மாணவா்களிடம் தவறான கருத்தை பரப்பிய திரைப்பட நடிகா் சூா்யாவைக் கண்டித்து, பெரம்பலூரில் இந்து முன்னணி அமைப்பின் இளைஞா் பிரிவான இந்து இளைஞா் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து இளைஞா் முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் நடிகா் சூா்யாவை கண்டித்து முழக்கமிட்டனா். தொடா்ந்து, நடிகா் சூா்யாவின் உருவ படத்தை கிழித்து எறிந்தனா்.