பெரம்பலூா் துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கு. பாண்டியன் (50). இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், மகள் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் பாண்டியன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.