பெரம்பலூா் நகரில் இன்று மின் தடை

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, அரணாரை, கே.கே. நகா், அபிராமபுரம், காவலா் குடியிருப்பு, பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, சிறுகுடல், பீல்வாடி, குரும்பாபாளையம், அசூா், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூா், கே.புதூா், எஸ். குடிகாடு, வாலிகண்டபுரம், செங்குணம், எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com