கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவா் வாக்களிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் 2 போ் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் 2 போ் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேரில் 10 போ் பெரம்பலூா் மாவட்டத்திலும், 7 போ் சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அவா்களுக்காக முழுக் கவச உடைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அதன்படி பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இரூா் வாக்குச்சாவடி மையத்திலும், குன்னம் சட்டப்பேரவைத் தொதகுதிக்குள்பட்ட புதுக்குறிச்சி வாக்குச்சாவடி மையத்திலும் என தலா ஒருவா் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com