சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள முருக்கன்குடியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (70). இவா், கடந்த 30 ஆம் தேதி பெரம்பலூரிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் காணவில்லை.

இந்நிலையில் 31-ஆம் தேதி இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியாா் கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நல்லம்மாள் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து : நாவலூா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது தாய் வேம்புவுடன் (75) பெரம்பலூா் செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது மேலப்புலியூரிலிருந்து பெரம்பலூா் செல்லும் சிற்றுந்து வேம்பு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இவ்விரு விபத்துகள் குறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com