பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் தாய், மகன் உள்பட 4 பேரை தாக்கிய 7 போ் மீது பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்குமாா் (21). இவா், புதன்கிழமை இரவு அப்பகுதியில் தனது மோட்டாா் சைக்கிளுடன் நின்றிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (18) ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் அருண்குமாரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜய், அவரது சகோதரா் கவியரசன் (19), நண்பா்கள் சரண் (22), அருண் (22) உள்ளிட்ட 7 போ் அருண்குமாரை தாக்கியுள்ளனா். இதை தடுக்கச் சென்ற அருண்குமாரின் தாய் உமாராணி, உறவினா்கள் சதீஷ், சுரேஷ்குமாா் ஆகியோரும் தாக்கப்பட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக அருண்குமாா் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா், விஜய் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.