குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டு சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டு சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (46). கூலித் தொழிலாளியான இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா். ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ராஜேந்திரன் மது போதையில் சென்றதால், கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராஜேந்திரன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com