கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிக்க 11 சிறப்பு பறக்கும் படை

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க, 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க, 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்திடவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூா் பகுதி- 1, 2, வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூா், கொளக்காநத்தம், கீழப்புலியூா், செட்டிக்குளம், வரகூா், வடக்கலூா், கூத்தூா் ஆகிய 11 குறு வட்டத்துக்கும் தலா 1 வட்டாட்சியா் தலைமையில், 1 உதவியாளா் அல்லது வருவாய் ஆய்வாளா் கொண்ட 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினா் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நபா்கள், நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தல் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com