பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே ஏரியில் மிதந்த முதியவரின் சடலத்தை மங்களமேடு காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
குன்னம் அருகிலுள்ள நமையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன் (52). இவரும், இவரது மனைவி பச்சையம்மாளும் கடந்த 17- ஆம் தேதி வயலுக்குச் சென்றனா்.
அங்கிருந்து உழவு செய்வதற்காக டிராக்டா் அழைத்து வருவதாகக் கூறிச் சென்ற ராஜேந்திரன் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவரது மாடு கிராமத்திலுள்ள ஏரியில் மூழ்கி இறந்ததால், அதை மீட்க செவ்வாய்க்கிழமை முயற்சி மேற்கொண்டனா்.
அப்போது ராஜேந்திரன் அதே ஏரியில் சடலமாக மிதந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த காவல்துறையினா் ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.