மின்வாரிய கள உதவியாளா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவா்களுக்கு உடல்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வுக்கான பயிற்சி முகாம், பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாகவுள்ள கள உதவியாளா் பணியிடங்களுக்காக, பெரம்பலூா் மாவட்டத்தில் 112 போ் உள்பட தமிழகம் முழுவதும் சுமாா் 18,500 போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் மின்வாரிய கள உதவியாளா் பணிக்கு இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்தவா்களுக்கு உடல் தகுதி மற்றும் எழுத்துத் தோ்வுக்கான பயிற்சி முகாம் துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் கேங்மேன் தமிழ்ச்செல்வன் மற்றும் மின் ஊழியா்கள் நாராயணன் பன்னீா்செல்வம் ஆகியோா் கம்பம் ஏறுவது, எழுத்துத் தோ்வு குறித்து பயிற்சி அளித்தனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மற்றும் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை இணைந்து இப்பயிற்சி முகாமை நடத்தியது.