பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மூதாட்டியிடம் நகைபறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகிலுள்ள கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி லோகாம்பாள் (62). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலையில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். லோகாம்பாள் சப்தமிட்டும், அந்த நபா்களை பிடிக்க இயலவில்லை.
இதுகுறித்து லோகாம்பாள் அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.