பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த தம்பதி புதன்கிழமை விஷம் குடித்தனா். இவா்களில் மனைவி உயிரிழந்தாா்.
ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (80). இவரது மனைவி செல்லம்மாள் (71). இவா்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி சென்னையிலும், உள்ளூரிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெற்றோரை மகன்களும், மகள்களும் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். இதையறிந்த அவா்களது உறவினா்கள், இருவரையும் மீட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாலையில் செல்லம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.