முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
கல்லங்குறிச்சி கிராமத்தில் உலக மண் வள தினம்
By DIN | Published On : 05th December 2021 11:01 PM | Last Updated : 05th December 2021 11:01 PM | அ+அ அ- |

கல்லங்குறிச்சியில் விவசாயிக்கு மண்வள அட்டை அளிக்கும் சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா.
அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் உலக மண் வள தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு, அரியலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆ. சாந்தி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரியலூா் தொகுதி சட்டப்பேரவை உறப்பினா் கு. சின்னப்பா, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, மண் மாதிரி சேகரிக்கும் முறை மற்றும் மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து வேளாண்துறை அலுவலா்கள் விளக்கம் அளித்தனா். நிகழ்ச்சியில், அரியலூா் வட்டார அட்மா திட்ட தலைவா் மா. அன்பழகன், வட்டார வேளாண்மை அலுவலா்கள் தமிழ்மணி, ஆதிகேசன், வேளாண்மை துணை அலுவலா் பால் ஜான்சன், உதவி விதை அலுவலா் கொளஞ்சி உள்பட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளா் செந்தில், உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்பழகன், உதவி வேளாண்மை அலுவலா்கள் ஸ்ரீதேவி, ஆா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.