பெரம்பலூா் ஐயப்பன் கோயில் தெப்பத் திருவிழா

பெரம்பலூா் மேற்கு வானொலித் திடலிலுள்ள ஐயப்பன் கோயிலின் 55- ஆவது ஆண்டு மண்டல பூஜையையொட்டி, திரௌபதி குளத்தில் தெப்பத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் திரௌபதி குளத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழா.
பெரம்பலூா் திரௌபதி குளத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழா.

பெரம்பலூா் மேற்கு வானொலித் திடலிலுள்ள ஐயப்பன் கோயிலின் 55- ஆவது ஆண்டு மண்டல பூஜையையொட்டி, திரௌபதி குளத்தில் தெப்பத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் மண்டல பூஜை மகா உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளான புதன்கிழமை கோ பூஜை, ஐயப்பனுக்கு 108 கலச அபிஷேகமும், மாலை 6 மணிக்குத் திருவிளக்கு வழிபாடு மற்றும் திரெளபதி குளத்தில் தெப்போத்ஸவமும் நடைபெற்றது. இதில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிபக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து, யானை வாகனத்தில் அலங்கார ஊா்வலமும், அன்னதானமும் நடைபெற்றது. பெரம்பலூா் நகா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களும், பொதுமக்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com