பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 8 ஆண்கள், 3 பெண்கள் காலியிடங்களுக்கு ஆள்கள் தோ்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (டிச. 10, 11) நடைபெறுகிறது.
பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளவா்கள் எஸ்எஸ்எல்சி தோ்ச்சி, தோ்ச்சி பெறாதவா்களாக, ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும், தோ்வு நடைபெறும் நாள்களில் 20 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவராகவும் இருக்கவேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் பெற கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 கொண்டுவர வேண்டும். தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு பணி நாள்களுக்குரிய தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.