இன்று பட்டா பிரச்னைகளுக்கு தீா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் வட்டம், கோனேரிபாளையம் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கோனேரிபாளையம் ஊராட்சி அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா், திருவாளந்துறை, அகரம் வருவாய் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு பசும்பலூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும், குன்னம் வட்டம், பெரியவெண்மணி, கொளப்பாடி வருவாய் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு பெரியவெண்மணி ஊராட்சி அலுவலகத்திலும், ஆலத்தூா் வட்டம், கொளத்தூா் வருவாய் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கொளத்தூா் ராஜீவ்காந்தி சேவா கேந்திரா மையத்திலும் முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இம் முகாமில் நில அளவை எண்கள், உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரா் பெயா் அல்லது தந்தை, காப்பாளா் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை திருத்தம், பட்டாதாரரின் பரப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com