அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி, பொங்கல் பரிசுத் தொகை வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் தலைமை நிலையச் செயலா் கே.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாா்கள் அனைவருக்கும் ஜனவரி 1- ஆம் தேதி முதல் 31 சதவிகித அகவிலைப்படி வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 3 ஆயிரம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ரூ. 1,000, ஓய்வூதியா்களுக்கு ரூ. 500 வழங்கப்படும் என உத்தரவிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.