பெரம்பலூரில் பொறியியல் பட்டதாரி இளைஞா் ஒருவா் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டு, புதன்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் மணிகண்டன் (27). பொறியியல் படிப்பு முடித்து வீட்டிலிருந்த இவா், கடந்த ஓராண்டாக மனநலன் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 11- ஆம் தேதி திருச்சி தனியாா் மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து கடந்த 27-ஆம் தேதி வீட்டுக்கு வந்தாராம்.
புதன்கிழமை காலை தந்தை வெற்றிவேலும், தாய் திலகவதியும் வெளியேச் சென்றிருந்த நிலையில், விற்பனை நிலையத்திலிருந்து பெட்ரோல் வாங்கி வந்த மணிகண்டன் தனது உடலில் ஊற்றி, தீயிட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளாா்.
இதையறிந்த அப்பகுதியினா் தீயை அணைத்து, மணிகண்டனை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.