பெரம்பலூரில் இன்று மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 1) வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 1) வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம், மீண்டும் வழக்கம் போல் பிப்ரவரி 1 முதல் (திங்கள்கிழமை தோறும்) காலை 10 மணியளவில் ஆட்சியரகத்தில் நடைபெறும்.

மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து தங்களது கோரிக்கை மனுவைத் தொடா்புடைய ஆவணங்களுடன் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com