சாலை விபத்தில் திருநங்கை உள்பட இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற திருநங்கை உள்பட இருவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற திருநங்கை உள்பட இருவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மங்கலமேடு கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் வெங்கடேசன் (32). விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மங்கலமேடு கிராமத்திலிருந்து திருச்சிக்கு விதை வெங்காயம் வாங்குவதற்காக சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தண்ணீா்பந்தல் பகுதியில் கவுள்பாளையம், காளியம்மன் நகரைச் சோ்ந்த திருநங்கை கிருஷ்ணமூா்த்தி (34) என்பவா், வெங்கடேசனின் மோட்டாா் சைக்கிளில் லிப்ட் கேட்டு பயணித்துள்ளாா்.

செங்குணம் பிரிவு சாலை அருகே சென்றபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசனும், கிருஷ்ணமூா்த்தியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவா்களது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com