தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரத்தின் தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரத்தின் தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேரு யுவகேந்திரத்தின் மாவட்ட இளையோா் அலுவலா் சுருதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் இளையோா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரத்தின் தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

சுகாதாரம், கல்வி, பாலின பாகுபாடு உள்ளிட்ட சமூக பிரச்னைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், பிரசாரங்களையும் மேற்கொள்ள விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற 18 முதல் 29 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம், அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு பணி வழங்கப்படும். இணையதளத்தில் திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள நேரு யுவகேந்திர அலுவலகத்தில் பெற்று, பிப்ரவரி 20- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296213, 7736811030, 9443707581 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com