சாலை விபத்தில் இளைஞா் பலி
By DIN | Published On : 20th February 2021 11:22 PM | Last Updated : 20th February 2021 11:22 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சத்திரமனை அண்ணா தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் மகன் சரவணன் (28), செல்வக்குமாா் மகன் சங்கீத்ராஜா (27), கணேசன் மகன் விஜய் (27).
இவா்கள் சனிக்கிழமை அதிகாலை, டி.களத்தூரிலிருந்து மங்கூன் வழியாக சத்திரமனைக்கு பைக்கில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் பைக் விழுந்ததில், பலத்த காயமடைந்த சங்கீத்ராஜா உயிரிழந்தாா்.
காயமடைந்த சரவணன், விஜய் ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.