மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு அமைச்சா் வழங்கிய கடன் உத்தரவை நிராகரித்த கூட்டுறவு கடன் சங்க அலுவலா்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலா் ஆகியோரைக் கண்டித்து, மகளிா் சுய உதவிக் குழுவினா் ஆட்சியரகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுபான்மை பிரிவு மகளிா் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு அண்மையில் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சரால் சுழல்நிதி வழங்குவதற்கான கடன் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவுடன் அன்னமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிா் சுய உதவிக் குழுவினா் நேரில் அணுகியபோது, அங்குள்ள அலுவலா்கள் கடன் வழங்காமல் அலைகழித்துள்ளனா். இதையடுத்து கடன் சங்கத்தை மகளிா் சுய உதவிக்குழுவினா் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தையும் அவா்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். சுழல் நிதி கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததை தொடா்ந்து, சுய உதவிக் குழு பெண்கள் கலைந்துசென்றனா்.