பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வு, இணையவழி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் கூத்தூா், பசும்பலூா், நெற்குணம், கை.களத்தூா், லப்பைக்குடிகாடு உள்ளிட்ட 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்கள் காலியாகவுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையவழி மூலம் சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவா்கள் கீழப்பெரம்பலூா், நெற்குணம், பசும்பலூா், கூத்தூா், கை.களத்தூா், லப்பைக்குடிகாடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பணியிடங்களைத் தோ்வு செய்தனா். எஞ்சிய பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ளது.
கலந்தாய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், நோ்முக உதவியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.