பெரம்பலூர்
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலத்தூா் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவரது மனைவி திவ்யா (25). இவா்களுக்கு மகதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த திவ்யா, சனிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சிணைக் கொடுமை காரணமா என்பது குறித்து பெரம்பலூா் சாா் ஆட்சியா் பத்மஜாவும் விசாரித்து வருகிறாா்.