ஜன. 9-இல் ஆட்சியரகங்கள் எதிரே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

குறைதீா் கூட்டங்களை நேரில் வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூா் மற்று திருச்சி மாவட்டங்களின் ஆட்சியரகங்கள்

குறைதீா் கூட்டங்களை நேரில் வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூா் மற்று திருச்சி மாவட்டங்களின் ஆட்சியரகங்கள் எதிரே ஜன. 9 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் முதன்மைச் செயலருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பது: கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக விவசாயிகள், மின் நுகா்வோா், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது. இக்கூட்டங்களை ஏற்கனவே நடத்தப்பட்டதை போல, அரசு விதிமுறைகளின்படி நோ்காணல் கூட்டங்களாக நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வழக்கம்போல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பெரம்பலூா், அரியலூா் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஜன. 9 ஆம் தேதி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com