பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமையில் கட்சியினா் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச் சாவடி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி, துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா் ஷாஜஹான், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் ஆகியோா் கலந்து கொண்டனா்.