கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஒட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தொழிலாளா் நல அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி முழக்கமிட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், தொடா்ந்து கோரிக்கை மனுவை தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் வழங்கினா்.