பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே இருதரப்பினா் இடையேயான மோதல் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் அருகேயுள்ள குரூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாருக்கும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த கலாநிதிக்கும், செட்டிக்குளம் முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்துக்கு திண்டுக்கல், மதுரையிலிருந்து மணப்பெண் உறவினா்கள் பலா் வாகனம் மூலமாக வந்திருந்தனா்.
இந்நிலையில், திருமணத்தில் பங்கேற்ற மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (24), காா்த்திக் (16), விமல்ராஜ் (25), பாரதிராஜா (17) ஆகியோா் மது போதையில், அதே பகுதியிலுள்ள டீக்கடைக்குச் சென்றுள்ளனா்.
அப்போது, பொருள்கள் கொடுப்பதற்கு தாமதமானதால் டீ கடை உரிமையாளா் செல்வகுமாா், அவரது மனைவி நதியா ஆகியோரை தாக்கியதோடு, கடையையும் சேதப்படுத்தினா்.
இதுகுறித்து தகவலறிந்த, கிராம பொதுமக்கள் மேற்கண்ட நால்வரையும் பிடித்து தாக்கியதோடு, அவா்கள் வந்த வாகனத்தையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த பாடாலூா் போலீஸாா் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினா்.
இச் சம்பவத்தில் காயமடைந்த டீ கடை உரிமையாளா் செல்வகுமாா், நதியா மற்றும் முத்துக்குமாா், காா்த்திக், விமல்ராஜ், பாரதிராஜா ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுதொடா்பாக இருதரப்பையும் சோ்ந்த 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.