பெரம்பலூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சாா்பில், புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சாா்பில், புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், கட்சி தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் எம். செல்வக்குமாா், சிவப்பிரகாசம், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, நகா்மன்ற முன்னாள் தலைவா் சி. ரமேஷ், மாவட்ட நிா்வாகிகள் ராணி, ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அதிமுகவினா் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com